இந்திய பங்குச் சந்தைகள் நேற்று தொடர்ந்து நான்காவது நாளாக வீழ்ச்சியை சந்தித்துள்ளன. வெளிநாட்டினர் முதலீடுகள் வெளியேறியது, அமெரிக்கா H -1B விசா கட்டணம் உயர்வு ஆகியவை முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதித்ததே இதற்கு காரணம் என்று கூறப்படுகின்றது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் “சென்செக்ஸ்” 386 புள்ளிகள் சரிந்து 81,715 புள்ளிகளில் வர்த்தக முடிவடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் “நிப்டி” 112 புள்ளிகள் சரிந்து 25 ஆயிரத்து 56 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
