வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும், இன்று அதி கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
கரையை நோக்கி மணிக்கு 10 கி.மீ., வேகத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்கிறது. புயலாக வலுவடைந்து இலங்கையை ஒட்டி தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்தில், நேற்று முதல் இன்று (நவ.,27) காலை வரை பதிவான மழை விவரம் மில்லி மீட்டரில்;

