Sunday, March 22, 2026
HomeUncategorizedதிருப்பதி மலைப்பாதையில் மின்சார பேருந்து..!

திருப்பதி மலைப்பாதையில் மின்சார பேருந்து..!

திருப்பதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், எரிபொருள் செலவை மிச்சப்படுத்தவும் திருப்பதி- திருமலை மலைப்பாதையில் மின்சார பேருந்து இயக்கப்பட உள்ளது. 

ஓலெக்ர்டா நிறுவனத்தின் தயாரிப்பான புதிய மாடல் எலெக்ட்ரிக் பேருந்துகள் திருப்பதிக்கு கொண்டு வரப்படுகிறது.

இந்த பேருந்துகளை இயக்கும் நிர்வாக பொறுப்பு, ‘மெகா இன்ஜினியரிங்’ நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. 

36 இருக்கைகள், குளிர் சாதனம். சிசிடிவி கேமரா, தானியங்கி கதவுகள் உள்ளிட்ட வசதிகளை கொண்ட இந்த பேருந்து, பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 300 கிமீ இயக்கலாம். 

வரும் 25ம் தேதிக்கு முன்பாக இன்னும் 10 பேருந்துகள் வர உள்ளன.

ஏழுமலையான் கோயிலில் பிரமோற்சவம் வரும் 27ம் தேதி தொடங்குகிறது.

அன்று முதல்வர் ஜெகன் ,இந்த பேருந்து போக்குவரத்தை தொடங்கி வைக்க உள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments