திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமி சிறப்பு பஸ்கள்

திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமி 11.05.2025 இரவு 8.47 மணிக்கு முழு நிலவு தொடங்கி, 12.05.2025 இரவு 10.43 மணி வரை முழு நிலவு, திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமி மே 11,12 ஆகிய தேதிகளில் வருவதை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக 4,533 சிறப்பு பஸ்கள் 9,342 நடைகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வரும் 11ம் தேதி முதல் 13ஆம் தேதி வரை ஒன்பது சிறப்பு ரயில்களுடன் 44 ரயில்கள் கூடுதல் பெட்டிகள் இணைப்புடன் இயக்கப்படும்.
9 முக்கிய சாலைகளில் 20 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள், கிரிவலப்பாதைக்கு வர வசதியாக 165 இணைப்பு பஸ்கள்,72 இடங்களில் கார் பார்க்கிங், போன்ற பல்வேறு வசதிகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் செய்யப்பட்டுள்ளன.