Wednesday, March 11, 2026
HomeUncategorizedதமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் தொடங்கியது

தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் தொடங்கியது

தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கிய சொட்டு  மருந்து முகாம் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

இதற்காக  43,051 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43,051 மையங்களில் இந்த முகாம் நடைபெறவுள்ளது.

இந்த மையங்களில் 47.36 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காய்ச்சல், இருமல் மற்றும் கோவிட் தொற்று இருந்தால் மையங்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் பிறந்த குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுப்பது அவசியம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments