தமிழ்நாட்டில் புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில், பி.எஸ்.சி. நர்சிங் படிப்பில் செவிலியர் கல்லூரிகள் தொடங்குவதற்குக் கடந்த ஆண்டு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ஆனால், அதற்கான கட்டுமானப் பணிகள் இன்னும் துவங்கப்படவில்லை. கட்டுமான பணிகள் அனைத்தும் முடிந்த பின்னரே செவிலியர் படிப்பில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.
எனவே, புதிதாகத் துவக்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளிலும் வரும் கல்வி ஆண்டில் பி.எஸ்.சி நர்சிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெறாது என்று தெரிவித்தார்.

