கார்த்திக் நரேன் டைரக்ஷனில் உருவாகி வரும் ‘மாறன்’ படத்தில் நடிச்சு முடிசுட்ட தனுஷ், தற்போது செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘நானே வருவேன்’ படத்தில் கவனம் செலுத்தி வாரார். கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.
அடுத்த ஷெட்யூலுக்கு ஆயத்த பணிகள் நடந்து வருது
இந்தப் படத்தைத் தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கும் ‘வாத்தி’ படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளார். பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரிக்கவுள்ள இப்படம், நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் ‘சார்’ என்றும், தமிழில் ‘வாத்தி’ என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருக்குது.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நேத்திக்கு சிம்பிளா பூஜையுட தொடங்கிட்டதா சேதி வருது.

