Home ஆன்மீகம் “நோய்களை குணமாக்கும் தென் ஆலவாய் திருக்கோவில்” -சிறப்பு ஆன்மீக தகவல்கள்!

“நோய்களை குணமாக்கும் தென் ஆலவாய் திருக்கோவில்” -சிறப்பு ஆன்மீக தகவல்கள்!

மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகள் கூட குணமடைந்து உடல்நலம் பெறுகிற அதிசயக் கோவில்:

பண்டைய காலத்தில் திருவிளையாடல் புராணத்தில் மதுரைக்கு வழிகாட்டிய படலம் உண்டு. 

ஒரு காலத்தில் கடல் பொங்கி மதுரை மாநகரமே எல்லைகள் எல்லாம் தெரியாமல் குறுகிப்போய், மதுரை நகரின் எல்லை எதுவென்று தெரியாமல் போனது.

அப்படி கடல் பொங்கி குறுகிய மதுரையை முந்தைய அளவிற்கே மீண்டும் அமைக்க விரும்பிய சேகர பாண்டிய மன்னன் சிவ பெருமானிடம் வேண்டினான்

அப்போது சிவபெருமான் ஆலவாய் என்றழைக்கப்படும் ஒரு பெரிய பாம்பை வீசி போட்டிருக்கின்றார். 

போடப்பட்ட அந்த பாம்பு மதுரை ஊரின் முழுக்க வட்டமடித்து காட்டியிருக்கிறது. 

அப்போது தென்திருவாலவாய் கோயில் இருக்கும் இடத்தில்தான் அந்த பாம்புடைய வாயும், வாலும் ஒன்று சேர்ந்துள்ளது.

இந்த கோயிலும் தெற்கு திசையில் அமைந்ததால் தென்திருவாலவாய் என்று பொருள்படுகிறது.

 ஆலவாய் என்ற பாம்பு, தெற்கு திசை எல்லாம் சேர்ந்து தென் திரு ஆலவாய் என்று பெயர் வந்தது.

தெற்கு திசைக்குத் தலைவனாகிய எமன் வழிபட்ட கோயில்இது.

மனிதனுக்கு மரணத்தை விடக் கொடிய பகைவனும் இல்லை. அந்த மரணத் துயரை மாற்றும் வைத்தியனை விடச் சிறந்த நண்பனும் இல்லை.

இத்தகைய வைத்தியநாதப்

பெருமான் எழுந்தருளிக் காலன் வருங்கால் காட்சி கொடுக்கக் காத்திருக்கும் திருத்த‌லமே தென் திருவாலவாய் ஆகும்.

தனக்கு நோய் நொடி வந்து உயிருக்கு பங்கம் வருமோ எனும் பயம் எல்லோர் உயிரையும் எடுக்கும் எமனுக்கே வந்து விடுகிறது. சிவபெருமானை வணங்க அவரும் காட்சி தருகிறார்.

அப்போது தென்திருவாலவாய் க‌ோயிலுக்கு சென்று வழிபட்டு அந்த திருநீற்றை பூசு., இனி உனக்கு மரணபயமே கிடையாது என்கிறார். எமனும் வந்து வழிபட்டு தன் மரணபயம் நீங்கப் பெற்றான். அத்தகையை சிறப்பு வாய்ந்த தலம் இது.

திருநீற்றுப்பதிகம் பாடப்பெற்ற தலம் இது.

இக்கோயில் மதுரையில் உள்ள பஞ்ச பூத தலங்களில் அக்னி தலம் ஆகும். திருவிளையாடல் புராணக் கதைகளில் ஒன்றான மதுரைக்கு எல்லை கட்டிய படலம் நிகழப்பெற்ற கோயில் இது.

இங்குள்ள தென் திருவாலவாய் சுவாமியை வணங்கினால் நோய் நொடிகள் நீங்கப் பெறுவதால் ஏராளமான பக்தர்கள் இங்கு வரு‌கை தருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டிய நிலை விலகுகிறது.

இத்தலத்து இறைவனை வணங்குவோர்க்கு மன நிம்மதி கிடைக்கிறது. இத்தலத்து அம்பாளை வழிபட்டால் திருமணவரம், குழந்தை வரம் ஆகி‌யன கிடைக்கின்றன.

இக்கோயிலில் உள்ள அரசமரத்தை 108 முறை வலம் வந்து திருவாலவாய சுவாமியை நினைத்து உள்ளம் உருகி வேண்டி நின்றால், மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகள் கூட குணமடைந்து உடல்நலம் பெறுகிற அதிசயம் இத்தலத்தில் நடக்கிறது.

மேலும் நீண்ட ஆயுள் வேண்டுபவர்கள் இத்தலத்துக்கு வந்து இந்த அஸ்வத்த பிரதட்சணம் அதாவது 108 முறை வலம் வந்து வணங்குகின்றனர்.

இத்தலத்தில் 60ம் கல்யாணம் செய்வதும் ஏராளமாக நடக்கிறது. அவர்களே சதாபிசேகமும் (80) செய்து நல்ல ஆயுளை அடைகின்றனர்.

அருள்மிகு தென்திருவாலவாய் திருக்கோயில், தெற்கு மாசி வீதி, மதுரை… ஒருமுறை சென்று வாருங்கள்..

அறந்தாங்கி சங்கர்

Exit mobile version