மதுரை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து பேசினார். அப்போது, தமிழகத்தை ரூ.5 லட்சம் கோடி கடனில் அ.தி.மு.க., தத்தளிக்க விட்டு சென்றது. தி.மு.க., பொறுப்பேற்று நிதி நிலையை சீர்செய்து, பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
முன்னாள் முதல்வர் பழனிசாமி சட்டசபையை முடக்க போவதாக பேசி வருகிறார். நான் வெளிப்படையாக அவருக்கு சவால் விடுகிறேன், தைரியம் இருந்தால் முடக்கி பாருங்கள்.
ராகுல் சவால் விடுத்தது போல் தி.மு.க., இருக்கும் வரை தமிழகத்தில் பா.ஜ., கால் ஊன்ற முடியாது இவ்வாறு அந்தக் கூட்டத்தில் அவர் பேசினார்.

