மதுரை இராமநாதபுரம் தூத்துக்குடி நெல்லை தென்காசி கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் கடுமையான குளிர் நிலவுகிறது.
குறிப்பாக நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று பகல் நேரங்களில் ஊட்டி கொடைக்கானல் போன்று மிக கடுமையான குளிர் பதிவாகியுள்ளது.
திருச்செந்தூர் பகுதியில் பகல் நேர வெப்பநிலை 20°© ஆக குறைந்துள்ளது.
இதனால் திருச்செந்தூர் வட்டார பகுதி குளிரில் நடுங்கியுள்ளது.
மேலும் தூத்துக்குடி காயல்பட்டினம் பாம்பன் உள்ளிட்ட கடலோர பகுதிகளிலும் வெப்பநிலை குறைந்திருக்கிறது.
நெல்லையில் நேற்று 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குளிர் பதிவாகியுள்ளது(25°©) . – தென்காசி வெதர்மேன்

