பாரதத்தில் தோன்றிய “யோகாசனம்” என்னும் அரிய பொக்கிஷம் எப்போது , எங்கு தோன்றியது? யாரால் தோற்றுவிக்கப்பட்டது? என்கிற தெளிவான வரலாற்றுக் குறிப்புகள் இல்லை. இருப்பினும், சில தொல்லியல் ஆய்வுகளின்படி 5,000 ஆண்டுகளாவது இருக்கலாம் என்று கணிக்கப் படுகிறது. ஆனாலும், உறுதியான ஆதாரங்கள் இல்லை என்று கூறப்படுகிறது. எது எவ்வாறாயினும் “யோகாசனம்” என்பது மிகவும் தொன்மையானது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
பன்னெடுங்காலமாகவே யோகாசனம் என்பது இந்தியர்களின் அன்றாட வாழ்வியல் அம்சமாக விளங்கி வருகிறது. அகத்தியர், திருமூலர், பதஞ்சலி முனிவர் போன்றோர் தங்களது பாடல்களில் தந்துள்ள பல்வேறு விதமான குறிப்புகள் தந்துள்ளனர் என அறிய முடிகிறது.

