பகவான் ரமண மகரிஷிகளின் 142 ஆவது ஜயந்தி விழா இன்று (21/12/2021) சிறப்பான முறையில் நடைபெற்றது.
மஹன்யாச ருத்ர ஜபம், தனுர் மாத பாராயணம், ஜயந்தி தின சிறப்பு பாராயணம், ருத்ராபிஷேகம், சிறப்பு அபிஷேகங்கள், பூ மாலை அலங்காரங்களுடன் அன்பர்கள் பாமாலையும் சேர்ந்து ரமண ஜயந்தி விழாவிற்கு அழகு சேர்த்தன. இறுதியில் பகவானுக்கு ஆரத்தியுடன் விழா சிறப்புற நிறைவுற்றது.
அன்பர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் சிறப்பு உணவு பிரசாதம் வழங்கப்பட்டது.
ரமண ஜயந்தி நிகழ்ச்சிகள் அதிகாலை 5 மணி முதல் ஆச்ரம
சேனலில் நேரலை செய்யப்பட்டது.
