கேரளா ஸ்டேட் மலப்புழா பகுதியில் உள்ள சேராட் வில்லேஜைச் சேர்ந்தவர் ஆர் பாபு. இவர் அங்கு இருக்கும் குறம்பாச்சி மலைப்பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன் தனது மூன்று நண்பர்களுடன் அவர் அங்கு மலையேற்றம் செய்து இருக்கிறார். ஆனால் மலையில் ஏறிவிட்டு இறங்கும் போது பாபு தவறி கீழே விழுந்துள்ளார். ஆனால் அதிர்ஷ்டவசமாக மலைக்கு கீழே விழாமல் முகடு ஒன்றில் குதித்து தப்பிச்சு இருக்கார். அதாவது மலைக்கு நடுவே குகை போல இருக்கும் அமைப்பு ஆகும் இது. ஆள் செல்ல முடியாத இந்த இடத்தில் பாபு தவறி கீழே விழுந்துருக்கார்
பிப்ரவரி 7ம் தேதி உள்ளே விழுந்தவர் கடந்த 43 மணி நேரமாக அந்த மலை முகட்டில் சிக்கி தவிச்சிக்கிட்டு இருந்தார். முதலில் அவரை மீட்க அவரின் நண்பர்கள் அங்கு கிடைச்ச குச்சி, கம்புகள், கயிறுகளை வைத்து அவரை மீட்க முயன்று உள்ளனர். ஆனால் முடியலை. இதையடுத்து கீழே வந்த நண்பர்கள் உள்ளூர் ஆட்களிடமும், தீயணைப்பு துறையிடமும் தெரிவிச்சாய்ங்க.
இதை அடுத்து பிப்ரவரி 7ம் தேதி இரவு 12 மணிக்கு தீயணைப்பு படையினர் அங்கு வந்து கேம்ப் அமைத்தனர். அவரை மீட்கும் பணி இரவில் இருள் காரணமாக செய்யப்படலை. மறுநாள் தொடங்கப்பட்ட மீட்பு பணி ஓயாமல் நடைபெற்று, ஒரு வழியாக அந்த மாணவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.அந்த பாபு இருக்கும் முகட்டு பகுதி யாராலும் எட்ட முடியாத இடத்தில் இருந்ததால் காப்பாற்றுவதற்கு தாமதம் ஆகி உள்ளது.
