Sunday, March 15, 2026
HomeUncategorizedதேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி. மக்கள் நலனுக்கான போராட்டம் தொடரும் - இராமதாஸ்.

தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி. மக்கள் நலனுக்கான போராட்டம் தொடரும் – இராமதாஸ்.

தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி. மக்கள் நலனுக்கான போராட்டம் தொடரும் – பா.ம.க. நிறுவனர் இராமதாஸ்.

மக்கள் நலனுக்கான திட்டங்களையும், வாக்குறுதிகளையும் முன்வைத்து மக்களவைத் தேர்தலில் களமிறங்கி போராடிய பாட்டாளி மக்கள் கட்சிக்கு வெற்றி கிடைக்காதது மிகுந்த வருத்தமளிக்கிறது.

மக்களின் தீர்ப்பை பாமக தலைவணங்கி ஏற்கிறது. அவர்களின் ஆதரவையும், நம்பிக்கையையும் பெற பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து உழைக்கும்.

மக்களவைத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று தேசிய ஜனநாயகக் கூட்டணி 3-வது முறையாக ஆட்சி அமைக்கும் நிலைக்கு அழைத்துச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும், அந்தப் பணியில் அவர்களுக்கு துணை நின்றவர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் – இராமதாஸ்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments