ஔவையார் வழிபாடு என்று அழைக்கப்படும் இந்த வழிபாடு முறை பல்வேறு பெயர்களில் அறியப்படுகிறன. செவ்வாய் பிள்ளையார் வழிபாடு என்றும், பாட்டி வழிபாடு என்றும் சில இடங்களில் அழைக்கப்படுகின்றன. அது போல இந்த வழிபாட்டிற்காக பெண்கள் கடைபிடிக்கும் விரதம் ஔவையார் விரதம், செவ்வாய் பிள்ளையார் விரதம் என்று வழங்கப்படுகிறது.
ஆடி, தை மாதங்களில் ஏதேனும் ஒரு செவ்வாய்க்கிழமையில் நள்ளிரவில் ஆண்களுக்குத் தெரியாமல் (!) இவ்வழிபாடு நடக்கும். இந்த இரண்டு மாதங்களில் வழிபாடு நடத்தத் தவறும் பட்சத்தில் மாசியிலும் நடத்தலாம். அசந்தால் ஆடி, தகுந்தது தை, மறந்தால் மாசி என்று சொலவடையே உண்டு. தென்மாவட்டங்களில் பரவலாக இவ்வழிபாடு அனுசரிக்கப்படுகிறது.
இதன் காணொளி தொகுப்பை புதுகை பாரதி அவர்களின் வாயிலாக கேட்போம்…

