நூற்றாண்டு நாயகர் தலைவர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு, நிறைவாக நடந்தேறியது!
தனது ‘நா’நயத்தால் நம் உள்ளங்களில் எழுச்சியூட்டி – மக்கள் தொண்டில் கடைப்பிடித்த நாணயத்தால் தமிழினத் தலைவராக உயர்ந்த தலைவர் கலைஞர் அவர்களது வரலாற்றில் மீண்டும் ஒரு பொன் நாள்!
தமிழின உயர்வுக்காகத் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துக் கொண்ட நம் தலைவர் கலைஞரின் மகத்தான வாழ்வைப் போற்றும் வகையில் இந்திய அரசு, அவரது திருவுருவம் பொறித்த நாணயத்தை வெளியிட்டது, அவரது உயிரினும் மேலான நமக்கான பெருமையும் கூட!

