உலகப் புகழ்பெற்ற தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் உசேன் (73) இன்று காலமானார்.
இதயம் தொடர்பான பிரச்னையால் அமெரிக்காவில் உள்ள ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஜாகிர் உசேன் மறைவால் இந்திய திரையுலகமும், உலக அளவிலான இசை ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்துஸ்தானி இசைக்கலைஞரான ஜாகிர் உசேன், பத்மஸ்ரீ, பத்மபூஷன் உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

