Saturday, April 11, 2026
HomeUncategorizedகுடியரசு தினம் கொஞ்சம் ஃபிளாஷ்பேக்...

குடியரசு தினம் கொஞ்சம் ஃபிளாஷ்பேக்…

♻சுதந்திரம் பெறுவதற்கு 17 வருஷங்களுக்கு முன்னாடியே நம்ம காந்தியடிகள் ஏற்படுத்திய சுதந்திர தின நாள்தான் இந்த ஜனவரி 26. ஆனா அஃபீசியலா ஆகஸ்ட் 15ல் நாம சுதந்திரம் பெற்ற பின் காந்தித் தாத்தா விரும்பிய நாளைக் குடியரசு தினமாக, அதாவது மக்களாட்சி மலர்ந்த தினமாகக் கொண்டாட 26 நவம்பர் 1949இல் நேரு அமைச்சரவை முடிவு செய்தது. 1950 முதல் இது குடியரசு தினமாகக் கொண்டாடப்படுது

 இன்னும் கொஞ்சம் விரிவா தெரிஞ்சிக்க ஆசையா? 

குடியரசு தினம் என்றால் அண்ணல் அம்பேத்கார் அவர்களாக் நாம் உருவாக்கிய இந்திய அரசியல் சட்டம் அமலுக்கு வந்த நாள்…(அதுவரை 1935 ல் பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்ட இந்திய அரசியல் சட்டங்கள் அமலில் இருந்து வந்தது).. என்பது வெளிப்படையான உண்மை.

இதன் இன்னொரு பின்னணி என்னன்னா.. 1929ம் வருஷம் டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய அகில இந்திய மாநாட்டில், ‘பூரண சுயராச்சியமே நமது நாட்டின் உடனடியான இலட்சியம்’ என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டிச்சு. அதனை செயல்படுத்துவதற்கான போராட்டம் குறித்து காந்திஜியே முடிவுசெய்து அறிவிப்பார் என்று மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  இதுக் கிடையிலே அந்தக் காலகட்டத்தில் நாட்டில் பொருளாதார மந்த நிலை நிலவியது. வறுமை மக்களை வாட்டி எடுத்துக்கொண்டிருந்தாலும் சுதந்திர எழுச்சியும் கனன்று  கொண்டு இருந்தது. அதன் விளைவாகப் பல வன்முறைப் போராட்டங்கள் நடந்தன. இந்நிலையில் மீண்டும் சட்ட மறுப்பு இயக்கத்தைத் தொடங்கினால் அது மேலும் வன்முறைக்கே வழிவகுக்கும் என்பதை காந்திஜி உணர்ந்தார்.ஆகவே, தேசிய எழுச்சியை அகிம்சைப் பாதையில் திசை திருப்புவதற்கான வழிகள் குறித்து அவர் பலவிதமா யோசிச்சார்.அதன் முதல் கட்டமாக, நாடு முழுவதும் ஜனவரி 26ம் தேதி (1930) அன்னிக்கு அமைதியாகச் சுதந்திர தினம் கொண்டாட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அதன்படி அன்றைய தினம்தான் நகர்ப்புறங்களிலும் கிராமங்களிலும் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் கூட்டி, காந்திஜி வழங்கிய சுதந்திர தினப் பிரக்ஞையை எடுத்துரைத்தனர்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் மேற்கொண்ட அந்த உறுதிமொழியின் வாசகம் இதுதான்:
“பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம், ஆன்மீகம் ஆகிய நான்கு விதத்திலும் நமது தாய் நாட்டிற்குக் கேடு விளைவித்துவரும் ஓர் அரசாட்சிக்கு அடங்கி நடப்பது, மனிதனுக்கும் இறைவனுக்கும் செய்யும் துரோகம்.”

இந்த வாசகத்தை 1930 முதல் 1946 வரை ஆண்டு தோறும் இதே ஜனவரி 26ம் தேதி உரத்த குரலில் சொல்லி வந்ததை நினைவூட்டும் வகையிலேயே இந்நாளில் ரி பப்ளிக்- டேயை செலிபரேட் பண்றோமாக்கும்..

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments