Thursday, March 5, 2026
HomeUncategorizedபோதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க் ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளதாக அமித் ஷா பதிவு

போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க் ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளதாக அமித் ஷா பதிவு

டெல்லியில் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க் ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: மோடி அரசின் போதைப்பொருளுக்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையின் அடிப்படையில், டெல்லி-என்.சி.ஆர் பகுதியில் நார்கோட்டிக்ஸ் கட்டுப்பாட்டு பிரிவு (NCB) மற்றும் தில்லி காவல்துறையினர் இணைந்து நடத்திய சோதனையில் இந்த பெரிய போதைப்பொருள் வலையமைப்பு அழிக்கப்பட்டது. 

இதில் மெத்தம்பெட்டமைன், எம்.டி.எம்.ஏ, மற்றும் கோகெய்ன் உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன, இதன் மதிப்பு சுமார் 27 கோடி ரூபாய்க்கு மேல் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இது மோடி அரசு போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக தொடர்ந்து எடுத்து வரும் கடுமையான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments