98வது அகாடமி விருதுகள் வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 15ம் தேதி 6 அன்று நடைபெறுகிறது. இந்த விழா, லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெறும். விருது பரிந்துரைகளுக்கான வாக்களிப்பு ஜனவரி 12 முதல் ஜனவரி 16 வரை நடைபெறும். பரிந்துரைகள் ஜனவரி 22 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இந்த முறை நிகழ்ச்சியை கோனன் ஓ’பிரையன் தொகுத்து வழங்குவார்.
இந்த நிலையில், 2025 ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இந்திய திரைத்துறையில் இருந்து நடிகர்கள் கமல்ஹாசன், ஆயுஷ்மான் குரானா ஆகியோருக்கு ஆஸ்கர் விருது குழு அழைப்பு விடுத்துள்ளனர். உலகளவில் திரைத்துறையில் சிறப்பாக பங்காற்றிய 534 கலைஞர்களுக்கு ஆஸ்கர் விருது நிகழ்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அகாடமியில் உறுப்பினராக அழைக்கப்படுவது திரைப்படத் துறையில் ஒரு மிகப்பெரிய கௌரவமாக கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி, திரைப்படத் துறையில் சிறந்து விளங்கும் கலைஞர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பிற தொழில்நுட்ப வல்லுநர்களை உறுப்பினர்களாக இணைத்து, ஆஸ்கார் விருதுகளுக்கான தேர்வு செயல்முறையில் பங்கேற்க அனுமதிக்கும் ஒரு மதிப்புமிக்க அங்கீகாரமாகும்.

