கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் உடலை வீட்டிற்கு எடுத்து சென்று ஒரு மணி நேரம் இறுதி மரியாதை செலுத்த கேரள அரசு அனுமதி
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் உடலை அவர்கள் வீட்டிற்கு எடுத்து சென்று ஒரு மணி நேரம் இறுதி மரியாதை செலுத்த கேரள அரசு அனுமதி அளித்தது.
கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களுக்கு அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் இறுதி மரியாதை செலுத்த முடியவில்லை. இது மன உளைச்சலை அதிகரிக்கிறது. அதை நிவர்த்தி செய்ய கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்கள் வீட்டிற்கு கொண்டு செல்ல அனுமதிக்கப்படும். உடலை ஒரு மணி நேரம் வரை வைத்திருக்கலாம் என கேரள முதல்வர் அறிவித்துள்ளார்.

