Wednesday, March 11, 2026
Homeசெய்திகள்ஐபோன் தயாரிப்பில் புதிய மைல்கல்லை எட்டிய இந்தியா!

ஐபோன் தயாரிப்பில் புதிய மைல்கல்லை எட்டிய இந்தியா!

ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் உற்பத்தியில் சீனாவை மட்டுமே நம்பியிருப்பதைத் தவிர்த்து, தற்போது இந்தியாவில் 25 சதவீத உற்பத்தியைச் செய்து சாதனை படைத்துள்ளது.

கடந்த 2024-ல் 36 மில்லியனாக இருந்த உற்பத்தி, 2025-ல் 53 சதவீதம் அதிகரித்து 55 மில்லியனாக உயர்ந்துள்ளது; அதாவது உலகில் விற்பனையாகும் ஒவ்வொரு நான்கு ஐபோன்களில் ஒன்று இப்போது இந்தியாவில் தயாரானதாகும்.

குறிப்பாக, லேட்டஸ்ட் மாடலான ஐபோன் 17 வரிசையின் அனைத்து போன்களும் – ‘ப்ரோ’ மற்றும் ‘ப்ரோ மேக்ஸ்’ உட்பட – இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகைத் திட்டம் (PLI) மற்றும் ஃபாக்ஸ்கான், டாடா போன்ற நிறுவனங்களின் பங்களிப்பால், இந்தியா இப்போது ஆப்பிள் நிறுவனத்தின் மிக முக்கியமான உலகளாவிய உற்பத்தி மையமாக உருவெடுத்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments