Thursday, April 30, 2026
HomeUncategorizedஇந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் சோதனை வெற்றி!

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் சோதனை வெற்றி!

இந்தியாவின் போக்குவரத்துத் துறையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில், நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் ஹரியானா மாநிலம் ஜிந்த் (Jind) பகுதியில் தனது சோதனை ஓட்டங்களை வெற்றிகரமாக முடித்துள்ளது.

நேற்று (ஏப்ரல் 29, 2026) வெளியான தகவல்களின்படி, இந்த ரயில் மணிக்கு 80 கி.மீ வேகத்தில் இயக்கப்பட்டு வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது.

சுற்றுச்சூழலுக்குப் பெரும் சவாலாக இருக்கும் கார்பன்-டை-ஆக்சைடு (CO2) மற்றும் இதர மாசுகளை வெளியேற்றும் டீசல் என்ஜின்களுக்குப் மாற்றாக இது அமையும். இந்த ரயிலின் சிறப்பம்சம் என்னவென்றால், இது புகைக்குப் பதிலாக நீராவி மற்றும் தண்ணீரை மட்டுமே கழிவாக வெளியேற்றுகிறது.

சென்னையின் ஐசிஎஃப் (ICF) தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட இந்த நவீன ரயில், ஜிந்த் மற்றும் சோனிபட் இடையேயான 90 கி.மீ தூரப்பாதையில் விரைவில் தனது வர்த்தக ரீதியான பயணத்தைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் ஜெர்மனி, ஜப்பான், சீனா போன்ற நாடுகளின் வரிசையில் ஹைட்ரஜன் ரயிலை இயக்கும் உலகின் 5-வது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments