ஆசிரியர் தகுதித் தேர்வு எனப்படும் ‘டெட்’ (TET) தேர்ச்சி பெறுவதற்கான காலக்கெடுவை நாடு முழுவதும் மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, பள்ளி ஆசிரியர்களாகப் பணியாற்றுபவர்கள் அனைவரும் டெட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற விதிமுறை நடைமுறையில் உள்ள சூழலில், இந்த உத்தரவு நாடு முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
இதன்படி, ஆசிரியர்கள் டெட் தேர்ச்சி பெறுவதற்காக ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டிருந்த தற்போதைய காலக்கெடுவான 2027 ஆகஸ்ட் 31 என்பது, தற்போது மேலும் ஓராண்டு காலம் அதிகரிக்கப்பட்டு 2028 ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது; தங்களின் ஆசிரியர் பணியைத் தடையின்றித் தொடர்வதற்கும், தேர்வுக்குத் தயாராவதற்கும் கூடுதல் அவகாசம் கிடைத்துள்ளதால் தகுதித் தேர்வு எழுதக் காத்திருக்கும் ஆசிரியர்கள் மத்தியில் இந்த அறிவிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

