தமிழ்நாட்டில் அதிகமாக மழையினை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 3-வது வாரம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால், இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் அதிகாரப்பூர்வமாக வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, தமிழக அரசு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசு அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு மேற்கொள்கிறார். அப்போது பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்துகிறார்.
புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு
RELATED ARTICLES

