Thursday, March 12, 2026
HomeUncategorizedஇடியுடன் கூடிய மழை - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

இடியுடன் கூடிய மழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. 

இந்நிலையில், வங்க கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, படிப்படியாக அது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி வரும் 11-ம் தேதி வடதமிழக கடற்கரையை நெருங்கும்  எனவும், இதனால் வடதமிழகத்தில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

இதன் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி,  விருதுநகர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments