Friday, March 6, 2026
HomeUncategorizedபாட்டாளி மக்கள் கட்சி: சென்னைப் பெருநகருக்கான உள்ளாட்சித் தேர்தல் அறிக்கை

பாட்டாளி மக்கள் கட்சி: சென்னைப் பெருநகருக்கான உள்ளாட்சித் தேர்தல் அறிக்கை

பாட்டாளி மக்கள் கட்சி:சென்னைப் பெருநகருக்கான உள்ளாட்சித் தேர்தல் அறிக்கை 2022

முக்கிய அம்சங்கள் – சென்னை

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் ‘நாடாளுமன்ற ஜனநாயகம், சட்டமன்ற ஜனநாயகம் ஆகியவற்றை விட உள்ளாட்சி ஜனநாயகம் தான் மிகவும் வலிமையானது’ என்பதை வலியுறுத்தி வருகிறார். நாட்டு மக்களுக்கான எந்த ஒரு திட்டமிடலும் உள்ளாட்சியிலிருந்து தொடங்க வேண்டும். இந்திய ஜனநாயகம் வலிமைப்படுத்தப்பட வேண்டும் என்றால், உள்ளாட்சியில் ஜனநாயகம் தழைக்க வேண்டும் என்பது பாமகவின் நிலைப்பாடு ஆகும்.

 திகாரப்பரவலாக்கம் என்பது ஒவ்வொரு நிலையிலும் உறுதுணையாக இயங்கும் ‘துணையமைப்புக் கொள்கை (Principle of Subsidiarity)’ அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும். அரசாங்கத்தின் பெரும்பாலான சேவைகள் மக்களுக்கு அருகிலேயே உள்ளூர் அளவில் நிருவகிக்கப்பட வேண்டும்.

 வீடுகளில் குடும்பங்கள் தங்கள் அளவில் செய்துகொள்ள முடியாத சேவைகளைச் சமுதாயம் அளிக்க வேண்டியிருக்கிறது. உள்ளூர் அரசுகளால் மேற்கொள்ளமுடியாத பணிகளை மாவட்ட அளவிலும், மாவட்ட அளவில் மேற்கொள்ளமுடியாத பணிகளை மாநில அளவிலும், மாநில அளவில் மேற்கொள்ளமுடியாத பணிகளைத் தேசிய அளவிலும் மேற்கொள்ள வேண்டும். அதற்கான வழிவகைகளை அரசியல் சாசனத்தின் 74 ஆம் திருத்தம் கொண்டிருக்கிறது. அந்த அதிகாரத்தை நகர அரசுகளுக்கு அளிக்கத் தமிழ்நாடு அரசு இன்னமும் முன்வரவில்லை.

 மக்களாட்சி அடிப்படையில் உள்ளாட்சி நகரசபை அரசுகள் மேற்கொள்ள வேண்டிய ஏராளமான பணிகளை மாநில அரசும், அதிகாரிகள் கோலோச்சும் அரசு அமைப்புகளும் செய்துகொண்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக, சென்னை மாநகராட்சியின் மூலமாகச் செய்ய வேண்டிய பல பணிகளை சிஎம்டிஏ நிறுவனம் செய்துகொண்டிருக்கிறது. பெருநகரத் திட்டக்குழு (Metropolitan Planning Committee – MPC) எனும் அமைப்பின் மூலம் மக்கள் பங்கேற்புடன் தயாரிக்க வேண்டிய சென்னை நகருக்கான முழுமைத் திட்டத்தை (Chennai Metropolitan Masterplan) மாநில அரசே அதிகாரிகள் மூலம் உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

இந்தியப் பேரரசிடம் மாநில உரிமைக்காகக் குரல் கொடுக்கும் தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டின் உள்ளாட்சிகளுக்கான அதிகாரங்களை உடனடியாகப் பகிர்ந்தளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் துணையமைப்புக் கொள்கையை (Principle of Subsidiarity) செயலாக்க வேண்டும். அரசியல் சாசனத்தின் 74 ஆம் திருத்தத்தின் கீழான 18 அதிகாரங்களையும் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு முழுமையாக அளிக்க வேண்டும்.

 தமிழ்நாட்டின் நகரங்கள் எவ்வாறு திட்டமிடப்படுகின்றன, எவ்வாறு கட்டமைக்கப்படுகின்றன, எவ்வாறு நிருவகிக்கப்படுகின்றன என்பதில் தமிழ்நாட்டின் எதிர்காலம் பெருமளவு அடங்கியிருக்கிறது. இந்நிலையில், நகர்ப்புறச் சிக்கல்களுக்கு நிரந்தர தீர்வு காணுதல்; நீடித்திருக்கும் வளர்ச்சியைச் சாத்தியமாக்குதல்; நலவாழ்வை மேம்படுத்துதல்; காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துதல்; காலநிலை மாற்றத்தின் விளைவுகளுக்கு ஏற்பத் தகவமைத்தல் உள்ளிட்ட பணிகள் தேவையானவையும் அவசரமானவையும் ஆகும்.

 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலும், அதன் பின்னர் அமையவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி அரசுகளும் அத்தகைய பணிகளை முழுவேகத்தில் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அதற்கான அனைத்துவித நடவடிக்கைகளையும் பாட்டாளி மக்கள் கட்சி மேற்கொள்ளும்.

 இப்போது இல்லாவிட்டால், இனி எப்போதும் இல்லை. இதனை நாம் செய்யாவிட்டால், வேறு எவரும் செய்யப்போவது இல்லை. நம்முடைய எதிர்காலம், நமது குழந்தைகளின் எதிர்காலம், எதிர்வரப்போகும் பல தலைமுறைகளின் எதிர்காலம் – இதோ இப்போது நம்முடைய கைகளில்தான் இருக்கிறது. இதுவே தக்க தருணம். வாருங்கள் மாற்றம் படைப்போம். புதியதோர் நகர்ப்புறத் தமிழ்நாட்டை உருவாக்குவோம்.

 

பாமக முன்வைக்கும் சென்னை நகர்ப்புற செயல்திட்டம்

 

1. தெருக்கள்

 

ஒவ்வொரு நகரத்தின் ஒவ்வொரு தெருவையும் முழுமையான தெருவாக (Complete Street) வடிவமைக்க வேண்டும். இதற்காக சென்னைப் பெருநகரில் Chennai Complete Streets Policy வெளியிட்டு, அதனைச் செயல்படுத்துவற்கான மக்கள் இயக்கத்தை (Complete Streets Movement) தொடங்க வேண்டும்.

 

2. நடைபாதை, மிதிவண்டி

 

சென்னைப் பெருநகரில் மிதிவண்டி முழுமைத்திட்டம் (Chennai Bicycle Masterplan) வகுத்துச் செயல்படுத்த வேண்டும். நகரங்களில் முறையான நடைபாதைகளை முழுமையாக அமைக்க வேண்டும்.

 

3. Active Mobility சட்டம்

 

கர்நாடக மாநிலத்தின் Karnataka Active Mobility Bill போன்று தமிழ்நாட்டில் Active Mobility சட்டம் கொண்டுவர வேண்டும்.அது வளர்ச்சிக்கான போக்குவரத்து கொள்கையை (TOD – Transit-Oriented Development) செயலாக்கும் வகையில் அமைய வேண்டும்.

 

4. பேருந்து

 

MTC பேருந்துகள் எண்ணிக்கையை 8000 ஆக அதிகமாக்க வேண்டும்.

 

5. வாகன நிறுத்தங்கள்

 

வாகன நிறுத்தங்களை முறைப்படுத்தும் கொள்கையை (Parking Policy) அறிவித்துச் செயலாக்க வேண்டும். அரசாங்கமே அடுக்குமாடி வாகன நிறுத்தங்கள் (Multi-level car parking) கட்டும் திட்டங்கள் செயல்படுத்தக் கூடாது.

 

6. பெருநகர போக்குவரத்து ஆணையம் (CUMTA)

 

சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையத்தை (Chennai Unified Metropolitan Transport Authority – CUMTA) முழு அளவில் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். வளர்ச்சிக்கான போக்குவரத்து கொள்கையை (TOD – Transit-Oriented Development) செயலாக்க வேண்டும்

 

7. பேருந்து விரைவு போக்குவரத்து திட்டம் (BRT)

 

சென்னையில் பேருந்து விரைவு போக்குவரத்து திட்டம் (Bus Rapid Transit – BRT) எனும் தனிப்பட்ட பேருந்து போக்குவரத்து முறையை செயல்படுத்த வேண்டும்

 

8. மெட்ரோ, மின்சார ரயில், MRTS, பேருந்துகள் இணைப்பு

 

சென்னைப் பெருநகரின் மெட்ரோ ரயில், மின்சார ரயில், பேருந்து நிலையங்கள், நடைபாதைகள், மிதிவண்டி வசதிகள் இணைந்த ஒருங்கிணைப்பை உருவாக்க வேண்டும். 30 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு, முழுமையடையாமல் உள்ள MRTS கடற்கரை – பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டத்தின் கடைசிக் கட்ட ‘ஆதம்பாக்கம் – பரங்கிமலை’ இணைப்பை விரைவாக அமைக்க வேண்டும்.

 

9. மின்சார வாகனங்கள்

 

சென்னை பெருநகரில் அதிவேக மின்னேற்றக் கட்டமைப்புகளை (Superfast Electric Vehicle Charging Stations) உடனடியாகப் பரந்துபட்ட அளவில் அமைக்க வேண்டும்.  

 

10. குப்பை மேலாண்மை

 

பூஜ்யக் குப்பை (Zero Waste) கோட்பாட்டைச் செயலாக்க வேண்டும். இந்திய அரசின் 2016 திடக்கழிவு மேலாண்மை விதிகளை (Municipal Solid Wastes Rules) முழுமையாகச் செயல்படுத்த வேண்டும்

 

11. குப்பை எரிப்பு

 

குப்பை எரிக்கப்படுவதை முற்றிலுமாகத் தடுக்க வேண்டும். குப்பையிலிருந்து மின்சாரம் எடுப்பதாகக் கூறும் (Waste-to-energy) திட்டங்களை அத்தகைய திட்டங்களைக் கைவிட வேண்டும்.

 

12. பிளாஸ்டிக் ஒழிப்பு

 

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடையை முழுமையாகச் செயல்படுத்த வேண்டும்.

 

13. உற்பத்தியாளரே பொறுப்பேற்றல் (EPR)

 

நுகர்பொருள் விற்கும் பெருநிறுவனங்களையே, அவற்றின் குப்பைக்கு பொறுப்பாக்கும் – உற்பத்தியாளரே பொறுப்பேற்கும் கொள்கையை செயலாக்க வேண்டும் (EPR – Extended Producer Responsibility).

 

14. தூய காற்று செயல்திட்டம் (Clean Air Action Plan)

 

சென்னைப் பெருநகருக்கான தூய காற்றுச் செயல்திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.

 

15. காற்று மாசு கண்காணிப்பு

 

சென்னைப் பெருநகரின் காற்று மாசுப்பாட்டை உடனுக்குடன் கண்காணிக்கும் கருவிகளின் எண்ணிக்கையை 40 ஆக அதிகரிக்க வேண்டும்.

 

16. வாகன பராமரிப்பு

 

வாகன பராமரிப்பு மற்றும் திடீர் சோதனையை கட்டாயமாக்க வேண்டும்

 

17. எரிவாயு தானிகள்

 

சென்னைப் பெருநகரில் இயங்கும் டீசல், பெட்ரோல் ஆட்டோக்களை போதுமான அளவு மானியம் கொடுத்து எரிவாயு (LPG) ஆட்டோக்களாக அல்லது மின்சார ஆட்டோக்களாக மாற்ற வேண்டும்.  

 

18. புழுதி நீக்குதல்  

 

நகர்ப்புறச் சாலைகளை புழுதியற்றதாக மாற்ற வேண்டும் (Dust-Free Roads). சாலைகளில் குவியும் புழுதியை அகற்றித் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும்.  

 

19. அனல்மின் மாசு

 

அனல்மின் நிலையங்களின் காற்று மாசுபாட்டினை முற்றிலுமாகக் கட்டுப்படுத்த வேண்டும்.  

 

20. நகருக்குள் மாசில்லா பகுதி

 

சென்னைப் பெருநகரின் முக்கியமான பகுதிகளை, தனியார் கார்கள் நுழைய தடைவிதிக்கப்பட்ட குறைந்த மாசு பகுதிகளாக (Low Emission Zone) சோதனை முறையில் அறிவிக்க வேண்டும்.

 

21. நீர்வளம்

 

மழை நீர் சேகரிப்பு, வடிகால் வசதிகளை முழுமையாகச் செயலாக்க வேண்டும். மாநகரங்கள் மற்றும் நகரங்களில் பஞ்சு நகரம் முறையைச் செயல்படுத்த வேண்டும் (Sponge City Initiative).

 

22. குடிநீர்

 

மாநகரங்கள் மற்றும் நகரங்களில் வீடுகள் தோறும் குழாய்மூலம் நீர் வழங்க வேண்டும். குடிநீர் வழங்களில் தனியார் காநிறுவனங்களை (Water Privatisation)

அனுமதிக்கக் கூடாது.

 

23. துப்புரவு  

 

அனைத்து மக்களுக்கும் போதுமான துப்புரவு வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். துப்புரவுக்கான உரிமையை (Right to Sanitation) உறுதி செய்ய வேண்டும்.

 

24. கழிவுநீர் மறுசுழற்சி

 

கழிவுநீர் மேலாண்மை முறையை முழுமையாகக் செயலாக்க வேண்டும். கழிவுநீர் மறுசுழற்சி கொள்கையை உருவாக்கி (Grey Water Recycling Policy) செயல்படுத்த வேண்டும். .

 

25. ஆற்று வடிநிலப்பகுதி மேலாண்மை

 

சென்னைப் பெருநகரின் வெள்ளம், வறட்சி இரண்டுக்கும் தீர்வுகாண வடக்கே ஆந்திரப் பிரதேசம், தெற்கேயும் மேற்கேயும் பாலாற்று வடிநிலம், கிழக்கே வங்கக்கடல் ஆகியவற்றுக்கு இடைப்பட்ட 5542 சதுரக் கிலோமீட்டர் சென்னை ஆற்று வடிநிலப் பகுதியை (Chennai River Basin) காப்பாற்றிப் பேண வேண்டும்.

 

26. நலவாழ்வு

 

நகரப்பகுதிகளுக்கான மருத்துவமனைகளையும் மருத்துவ சேவைகளையும் அதிகமாக்க வேண்டும்

 

27. தொற்றா நோய்கள்

 

நகரங்களில் தொற்றா நோய்கள் அதிகமாகி வருவதைத் தடுக்கும் நோக்கில் – உணவில் அதிகச் செயற்கைக் கொழுப்பு, அதிகச் சர்க்கரை, அதிக உப்புத் தீமையைக் கட்டுப்படுத்துவதற்கான செயல்திட்டங்களை உருவாக்க வேண்டும் (Reduce Fat, Sugar and Salt). குடிப்பழக்கம் & புகையிலைப் பயன்பாட்டை ஒழிக்க வேண்டும் (Alcohol & Tobacco Control).

 

28. நகர்ப்புற உணவுக் கொள்கை & செயல்திட்டம்

 

நகர்ப்புற உணவுத் தொடர்பான சிறப்பு கொள்கை (Urban Food Policy) மற்றும் செயல்திட்டத்தை வகுத்து செயல்படுத்த வேண்டும்.  

 

29. சாலைப் பாதுகாப்பு

 

சென்னைப் பெருநகருக்கான VISION ZERO Road Safety Plan என்கிற திட்டத்தை வடிவமைத்து செயல்படுத்த வேண்டும்.

 

30. பள்ளிக்கு பாதுகாப்பான பயணம்

 

Safe Routes to Schools திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

 

31. பொதுவெளிகள்

 

சென்னைப் பொதுவெளிகள் முழுமைத் திட்டத்தை (Chennai Public Spaces Master Plan) உருவாக்கிச் செயல்படுத்த வேண்டும்.

 

32. நகர்ப்புற சாலைகள்

 

நகர்ப்புற சாலைகளை விதிமுறைப்படி அமைக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் சாலைகளை மழைநீரை உறிஞ்சும் sponge city நுட்பத்துடன் கூடிய காங்க்ரீட் சாலைகளாக மாற்ற வேண்டும்.  

 

33. சாலைப் பள்ளங்கள், குழிகள்

 

குண்டு குழிகள் இல்லாத தரமான சாலையை அமைக்க வேண்டும்

 

34. பொது இடங்களின் அழகு

 

பொது இடங்களின் அழகைக் கெடுக்கும் சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள், பதாகைகள் உள்ளிட்டவற்றை முற்றிலுமாக கட்டுப்படுத்த வேண்டும்

 

35. பசுமை நகரம்

 

சென்னைப் பெருநகர உயிரிப்பன்மய செயல்திட்டத்தை (Chennai Biodiversity Action Plan) உருவாக்கிச் செயல்படுத்த வேண்டும்.

 

36. வெள்ளம் & பேரிடர் தகவமைப்பு

 

தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களுக்குமான தகவமைப்பு மற்றும் பேரிடர் சமாளிப்புத் திட்டங்களை முழுமையாகச் செயலாக்க வேண்டும் (Adaptation and Resilience Action Plan).

 

37. துல்லியமான முன் அறிவிப்பு (Early Warning)

 

மழை, புயல், வெள்ளம், வெப்பம் குறித்து துல்லியமான முன்னறிவிப்பு (Early Warning) கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். சென்னைப் பெருநகரின் நில அமைப்பு வரைபடம் (Topographic Map) உருவாக்கப்பட்ட வேண்டும்.  

 

38. வெப்பத்தடுப்புச் செயல்திட்டம்

 

கோடைக்காலத்தில் பெரும் வெப்பப் பேரிடர்களை எதிர்கொள்வதற்கான வெப்பத்தடுப்புச் செயல்திட்டங்களை (Chennai Heat Action Plans) சென்னையில் வகுத்துச் செயல்படுத்த வேண்டும்.  

 

39. பசுமைக் கட்டட விதிகள்

 

பசுமைக் கட்டட விதிமுறைகளை உருவாக்கிச் செயல்படுத்த வேண்டும் (Green Buildings/Energy Conservation Building Code).

 

40 காலநிலை அவசரநிலைப் பிரகடனம்

 

தமிழ்நாட்டின் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் காலநிலை அவசரநிலைப் பிரகடனத்தை (Climate Emergency Declaration) அறிவிக்க வேண்டும்.  

 

41. காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்துதல்

 

காலநிலை மாற்றத்துக்குக் காரணமான கரியமிலவாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளைத் தமிழக நகரங்களில் முன்னெடுக்க வேண்டும்.  

 

42. விளையாட்டு

 

விளையாட்டு திடல்களை அமைப்பது, பராமரிப்பது, பயிற்சிகளுக்கு வழிவகுப்பது என அனைத்து வழிகளிலும் நகர அரசுகள் விளையாட்டை ஊக்குவிக்க வேண்டும்.

 

43. நகரில் வாழும் உரிமை

 

‘நகரில் வாழும் உரிமை’ (Right to the city) கோட்பாட்டை தமிழ்நாடு அரசு ஏற்க வேண்டும். நகரங்களில் குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களை நகரங்களை விட்டு வெளியேற்றக் கூடாது.  

 

44. கல்வி

 

சென்னைப் பெருநகரின் அரசுப்பள்ளிகள் அனைத்தும், முன்னணியில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு ஈடாக மேம்படுத்தப்பட வேண்டும்

 

45. தனியார்மயம்

 

குப்பை அகற்றுதல், குடிநீர் வழங்குதல், நகர்ப்புறப் போக்குவரத்து போன்ற நகரப்பகுதிகளுக்கான எந்தவொரு அரசு பொதுச் சேவையையும் தனியார்மயம் ஆக்கக் கூடாது.

 

46. நல்லிணக்கம் & அமைதி

 

பல்வேறு பண்பாடுகள், நம்பிக்கைகளுடன் மக்கள் இணைந்து வாழும் நகர்ப்புறங்களில், எதிர்கால வன்முறைகளைத் தடுக்கும் நோக்கில், நல்லிணக்கமான நகரத்தை உருவாக்கும் திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்த வேண்டும்.

 

47. பாதுகாப்பு

 

போதைப்பொருட்கள் தடுப்பு, தொழில்ட்ப முறையிலான கண்காணிப்புகள், குற்றங்களுக்கு விரைவான தண்டனை எனப் பல வழிகளிலும் நகரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

 

48. தொழில்நுட்பம்

 

தானியங்கி நுட்பங்கள், மெய்நிகர் நுட்பங்கள், பொருட்களின் இணையம் உள்ளிட்ட 4 ஆம் தொழில்புரட்சி (Fourth Industrial Revolution) யுகத்தை முழு அளவிலும் நேர்மறையாகவும் பயன்படுத்த வேண்டும்.

 

49. சேவைகள் உரிமைச் சட்டம்

 

தமிழ்நாட்டில் சேவைகள் உரிமைச் சட்டத்தை (Right to Public Services Act) வலிமையானதாகவும் முழுமையானதாகவும் கொண்டுவந்து செயல்படுத்த வேண்டும்.

 

50. பண்பாடு

 

சென்னைப் பெருநகரின் கலை, கலாச்சாரம், பாரம்பரிய சின்னங்கள், வரலாற்றைப் போற்றுவதற்கான திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.  

 

51. பெண்கள் & குழந்தைகள்

 

நகர்ப்புறங்களில் பெண்களின் உரிமை முழுமையாகக் காப்பாற்றப்பட வேண்டும். குழந்தைகள் உரிமைகளை நகரங்களில் உறுதி செய்ய வேண்டும். அவ்வாறே, முதியோருக்கான சிறப்புத் தேவைகளையும் நகரங்கள் நிறைவு செய்ய வேண்டும்.

 

52. மாற்றுத் திறனாளிகள் உரிமை

 

நகரங்களின் எந்தவொரு இடத்துக்கும் எவரது துணையும் இல்லாமல் மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பாகச் சென்று, திரும்பும் வகையில் நகர்ப்புற வசதிகள் அமைக்கப்பட வேண்டும்.

 

53. நகர்ப்புற வேலை உறுதித் திட்டம் & சமூக பாதுகாப்பு

 

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு ஈடாக சென்னைப் பெருநகரில் நகர்ப்புற வேலை உறுதித் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.  

 

54. வீட்டுவசதி

 

வாங்கத்தக்க விலைக்குள் வீடுகளின் விலையைக் கட்டுப்படுத்துவது, வாடகையை ஒழுங்குபடுத்துவது, வீட்டுவசதிக்கான நிதிஉதவிகளை எளிதாகக் கிடைக்கச் செய்வது, காலியாக விடப்படும் வீடுகள் மற்றும் வாழிடங்கள் அதிகம் இல்லாத நிலையை உருவாக்குவது எனப் பலவழிகளிலும் வீட்டுவசதி உரிமையை உறுதி செய்ய வேண்டும் சென்னைப் பெருநகரில் பழுதடைந்துள்ள குடிசைமாற்று வாரிய வீடுகளைச் சீரமைக்க வேண்டும்.

 

55. உள்ளூர் பொருளாதார வளர்ச்சி (Local Economic Development)

 

சென்னைப் பெருநகரில் உள்ளூர் பொருளாதார வளர்ச்சித் திட்டங்கள் (Local Economic Development Plan) உருவாக்கப்பட வேண்டும்.

 

56. மின்சாரம்

 

மின் கட்டணத்தை உயர்த்தாமல், மாதவாரியாக மின்கட்டணத்தை அளவிடும் முறையைக் கொண்டுவர வேண்டும்.

 

57. ஏரியா சபை (Area Sabha) கூட்டம்

 

கிராம ஊராட்சிகளில் கிராமசபை கூட்டங்கள் நடப்பது போல, சென்னைப் பெருநகரில் வார்டுசபை, ஏரியா சபை (Area Sabha) கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.  

 

58. முழுமைத் திட்டம் (Masterplan)

 

நகர்ப்புறத் திட்டமிடலில் நகர்ப்புற உள்ளாட்சிகளின் பங்கு முதன்மையானதாக இருக்க வேண்டும். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 74ஆம் திருத்தத்தின் 243ZE பிரிவின் கீழ், பெருநகரத் திட்டக்குழு (Metropolitan Planning Committee – MPC) எனும் அமைப்பின் மூலம் சென்னைப் பெருநகருக்கான புதிய முழுமைத் திட்டத்தை (Third Master Plan for Chennai Metropolitan Area 2027-2046) உருவாக்க வேண்டும்.

 

59. நிதி ஆதாரம் & பங்கேற்பு பட்ஜெட் (Participatory Budgeting)

 

நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான நிதியாதாரம் வலுவாக்கப்பட் வேண்டும். மாநில அரசின் உள்ளாட்சிகளுக்கான நிதிப்பங்கீடு அதிகமாக்கப்பட வேண்டும். மாநில அரசின் பட்ஜெட்டில் உள்ளாட்சிகளுக்கான நிதிப்பகிர்வை விளக்கும் வகையில் தனி இணைப்பு வெளியிடப்பட வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சிகளின் நிதிநிலை அறிக்கைகள் மக்கள் பங்கேற்புடன் தயாரிக்கப்படும் முறைக்கு (participatory budgeting) மாற வேண்டும்.  

 

60. மக்களாட்சி

 

அரசின் சேவைகள் அனைத்தும் மக்களுக்கு மிகவும் நெருக்கமான தொலைவில் சிறிய அரசாங்கங்கள் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்கிற துணையமைப்புக் கொள்கை (Principle of Subsidiarity) கோட்பாட்டை முழுமையாகச் செயல்படுத்த வேண்டும். நகர்ப்புற அரசுகளை அரசு அதிகாரிகளின் கட்டுப்பட்டில் இருந்து விடுவிக்க வேண்டும். இந்திய அரசியல் சட்டத்தின் 12 ஆவது அட்டவணையில் உள்ள அதிகாரங்கள் முழுமையாக நகர அரசுகளுக்கு அளிக்கப்பட வேண்டும். அவற்றுக்கான நிதி ஆதாரங்களும் அளிக்கப்பட வேண்டும்.

 

#Anbumani Ramadoss

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments