சென்னையில் உள்ள மயிலாப்பூர் கற்பகாம்பாள் சமேத கபாலீசுவரர் கோவிலில் பங்குனி பெருவிழா நாளை காலை 6.30 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இந்த விழா தொடர்ச்சியாக வரும் 18-ந்தேதி வரை நடைபெறுகிறது.
10-ந்தேதி காலையில் வெள்ளி சூரிய வட்டம் நிகழ்ச்சியும், இரவு வெள்ளி சந்திர வட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. 11-ந் தேதி காலையில் அதிகார நந்தி காட்சி நிகழ்ச்சி நடக்கிறது. 13-ந்தேதி இரவு வெள்ளி ரிஷப வாகன காட்சி நிகழ்ச்சி நடக்கிறது.

