இரு சக்கர வாகனத்தையும் சேர்த்து சாலை அமைத்த ஒப்பந்ததாரர்:
வேலூர் மாநகராட்சியில் இரவோடு இரவாக காங்கிரீட் சாலை அமைக்கும் பணிக்காக கலவையை கொட்டிச் சென்ற ஒப்பந்ததாரர்.
வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கரவாகனத்தையும் சேர்த்து சாலை போட்டுச்சென்றதாக புகார்.
இரு சக்கர வாகனங்களின் சக்கரங்கள் கான்கிரீட்டால் பிடித்து கொண்டதால் அந்த பைக்குகளை வெளியே எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா என இரு சக்கர வாகனத்தையும் சேர்த்து சாலை அமைத்த ஒப்பந்ததாரரை நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர்

