பெட்ரோல், டீசல் விலையை கடந்த இரு மாதங்களாக உயர்த்தாமல் இருப்பதால், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு ஜூன் மாதம் முடிந்த முதல் காலாண்டில் ரூ.10,196.94 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மும்பைப் பங்குச்சந்தையில் ஹெச்பிசிஎல் நிறுவனம் தாக்கல் செய்த பைலிங்கில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஏப்ரல்-ஜூன் மாதம் முடிந்த முதல் காலாண்டில் ஹெச்பிசிஎல் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.1795 கோடியாக அதிகரித்துள்ளது.

