சேலம் அருகே ஆத்தூரில் வாட்ஸ் அப் மூலம் ஆர்டர் எடுத்து இருசக்கர வாகனத்தில் கஞ்சா பொட்டலங்களை டோர் டெலிவரி செய்துவந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விசாரணையில், அவர் நரசிங்கபுரம் 16வது வார்டு அதிமுக அம்மா பேரவை செயலாளர் ரமேஷ் என்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், 40 கஞ்சா பொட்டலங்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை காவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

