கார்களின் பின் இருக்கை சீட் பெல்ட்களுக்கும் அலாரம் வைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்க திட்டமிட்டுள்ளது.
இதற்காக அக்.,5க்குள் மக்கள் கருத்து தெரிவிக்க அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
தற்போது கார்களின் முன் இருக்கையில் சீட் பெல் அணிவது கட்டாயமாக உள்ளது.
அப்படி அணியவில்லை என்றால், சீட் பெல்ட்டில் அலாரம் ஒலிக்கும். அதைபோன்று பின் இருக்கை சீட் பெல்ட்களுக்கும் இதை கட்டாயமாக்க அரசு முடிவு செய்து, அதற்கான வரைவு விதிகளை வெளியிட்டுள்ளது.

