விஷூ பூஜையையொட்டி சபரிமலை நடை இன்று மாலை 5.00 மணிக்கு திறக்கப்படுகிறது. ஏப்ரல் 15ம் தேதி அதிகாலை 4.00 மணி முதல் 7.00 மணி வரை விஷுகனி தரிசனம். சுவாமியை தரிசனம் செய்த பிறகே பக்தர்களுக்கு விஷுகனி தரிசனம் செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது.
தந்திரியும், மேல்சாந்தியும் இணைந்து பக்தர்களுக்கு கை நீட்டம்【 காசு 】 கொடுக்கின்றனர். ஏப்ரல் 19ம் தேதி இரவு 10.00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

