மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்தபடி, ரூ. 2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு நாளையுடன் முடிகிறது.
எனவே, 2,000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் இன்றும் நாளையும் வங்கிகளில் சென்று மாற்றிக்கொள்ளலாம்.
செப்டம்பர் 1ம் தேதி நிலவரப்படி, புழக்கத்தில் இருந்த ரூ.3.32 லட்சம் கோடி மதிப்பிலான 93 சதவிகித 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டிருப்பதாக ஆர்பிஐ அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நாளையுடன் ரூ.2000 நோட்டுகள் மதிப்பிழக்கப்படுவதால், பெட்ரோல் பங்க்களில், அந்த பணத்தை வாங்க மறுத்து வருகின்றனர்.

