மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழாவை முன்னிட்டு மின்னொளியில் ஜொலித்த தஞ்சை பெரிய கோவில்..
தஞ்சை பெரிய கோயில் மின்னொளியில் மின்னி வருகிறது. தஞ்சாவூர் பெரிய கோயிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038 ஆவது சதய விழா செவ்வாய்க்கிழமை காலை தொடங்கியது.
இதையொட்டி, பெரிய கோயில் மின்னொளியில் மின்னி வருகிறது.
மாமன்னன் ராஜராஜ சோழன் முடி சூடிய திருநாளை, அவன் பிறந்த நட்சத்திரமான ஐப்பசி சதய நாளன்று சதய விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
இவ்விழா அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கோயில் வளாகம் முழுவதும் இரவு நேரத்தில் மின்னொளியில் மின்னுகிறது

