தென்காசி மாவட்டம் செங்கோட்டையிலிருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது அச்சன்கோவில்.
ஐயப்பனின் ஐந்து படை வீடுகளில் ஒன்றான இங்கு மட்டுமே தேர் திருவிழா நடப்பது வழக்கம்.
இந்த ஆண்டு ஆராட்டு திருவிழா கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவின் ஒன்பதாம் நாளன்று தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.
பத்தாம் நாளான நாளை காலை ஆராட்டு திருவிழா நடக்கிறது.
தமிழகத்தை போல் கேரளா கோவில்களில் தேரோட்டம் நடப்பது அபூர்வமான ஒன்று
