ஸ்ரீ காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் பூர்வாசிரம சகோதரரும், சென்னையில் உள்ள ஸ்ரீ சங்கரா பள்ளிகளின் தாளாளரும், அமர பாரதி ஆன்மீக மாத இதழின் ஆசிரியருமான ஸ்ரீ ராமகிருஷ்ணன் , இன்று காலை சிவனடி சேர்ந்தார். துரைப்பாக்கம் ஸ்ரீ சங்கரா பள்ளியில் அவரது உடல் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.இன்று மதியத்திற்கு மேல் இறுதி நிகழ்வுகள் நிகழ உள்ளன. அளப்பரிய தொண்டு செய்த அவரது பணிகளை போற்றுவோம்.. அவரது ஆன்மா சாந்தி அடைய ஸ்ரீ காஞ்சி காமாட்சி அன்னையை பிரார்த்திப்போம். –அவர் மீது அன்பு கொண்ட அத்தனை நெஞ்சங்களுக்கும் எங்களது ஆறுதல்கள் மற்றும் ஆழ்ந்த இரங்கல்.

