சிறிய அழுத்தங்களுக்கு அஞ்சிவிடுவோம் என்று பிரதமர் நரேந்திர மோடியும், அமைச்சர் அமித் ஷாவும் நினைக்கின்றனர். ஆனால் அது நடக்காது.
மோடியும், அமித் ஷாவும் நம் ஜனநாயகத்திற்கு எதிராக எது செய்தாலும் நாங்கள் களத்தில் நின்று போராடுவோம். நாங்கள் எங்கும் ஓடி, ஒளிய முடியாது என்று கூறுகிறார்கள்.
நாங்கள் ஏன் ஓடி ஒளிய வேண்டும்? ஓடுவதைப் பற்றி அவர்கள் தான் பேசுகிறார்கள். நாங்கள் எதற்கும் அஞ்சவில்லை. மோடியைப் பார்த்து எங்களுக்குப் பயமில்லை. என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்.
நான் எனது கடமையைச் செய்வேன். ஜனநாயகத்தை காக்க செயல்படுவேன். நாட்டில் ஒற்றுமையை நிலைநிறுத்த செயல்படுவேன்” என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். – காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி
