ரஷ்யா மீது தாக்குதல் நடத்த ஏவுகணைகளை வழங்கும் நாடுகள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்படும் என ரஷ்ய அதிபர் புதின் அமெரிக்காவுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்யா மீது தாக்குதல் நடத்த தொலைதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் வழங்கி உதவுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையிலான போரை உலகப் போராக மாற்ற மேற்கத்திய நாடுகள் முயற்சி எனவும் குற்றச்சாட்டு.
