தமிழகத்தில் பல முக்கிய கோயில்களில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
ஏழை, எளிய ஆதரவற்ற பொதுமக்கள் இதன் மூலம் பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், கோயில்களில் வழங்கப்படும் அன்னதானத்தின் தரம் குறித்து ஆராய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அறநிலையத்துறையின் கீழ் இருக்கும் பல்வேறு கோயில்களில் வழங்கப்படும் உணவுகள் தரமற்ற முறையில் இருப்பதாக புகார்கள் எழுந்தது.
இதையடுத்து 764 கோயில்களில் அன்னதானத்தின் தரம் குறித்து ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பிக்க அறநிலையத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
