கடலூர், புதுக்கூரைப் பேட்டையில் கடந்த 2003-ம் ஆண்டு நடைபெற்ற ஆணவக்கொலை வழக்கில் பெண்ணின் அண்ணன் மருதுபாண்டி என்பவருக்கு தூக்கு தண்டனை.
பெண்ணின் தந்தை உள்ளிட்ட 10 பேருக்கு மூன்று ஆயுள் தண்டனையும் வழக்குப்பதிவு செய்யாமல் சாட்சிகளை அழித்ததாக காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளருக்கு தலா ஒரு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது.
2003ஆம் ஆண்டு முருகேசன் – கண்ணகி இருவரும் சாதி மாறி திருமணம் செய்து கொண்டதால் வாய் மற்றும் காதில் விஷத்தை ஊற்றி தீவைத்துக் கொளுத்தி கொலை செய்யப்பட்டனர்.
