Home Uncategorized ஆவணி அவிட்டம் – உபநயனம் பூணூல் அணியும் சடங்கு..!

ஆவணி அவிட்டம் – உபநயனம் பூணூல் அணியும் சடங்கு..!

அவிட்டம் எனும் ஆண்டு சடங்கு உபநயனம் செய்து கொண்ட பிராமணர் ஆடி அல்லது ஆவணி மாதத்தில் அவிட்டம் நட்சத்திரத்தோடு வரக்கூடிய பெளர்ணமி தினத்தில் கடைப்பிடிக்கப்படும் மகத்தான வழிபாடு நாளாகும்.

இது தினத்தை ரிக், யசுர் வேதிகள் கொண்டாடும் தினமாகும். சாம வேதிகள் விநாயகர் சதுர்த்தி அன்று கொண்டாடுவார்கள். இது ஒரு கூட்டு வழிபாடாகும்.

இந்த அற்புத திருநாளை ஆற்றங்கரை, குளக்கரையிலோ குளித்து இத்தகைய சங்கு தொடங்குவர்.
கணபதி பூஜையுடன் தொடங்கும் இந்த விரதம், புண்யாவாகனம் செய்த பின்னர் பஞ்சகவயம் அருந்தி உடல், மனம் மற்றும் இருப்பிடத்தைச் சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

ஆவணிஅவிட்டம் மந்திரம் பெருமைகள் இதோ!

கிழக்கு திசையில் வாழை இலை போட்டு அதில் அரிசி பரப்பி அதன் மீது 7 கொட்டை பாக்கு வைத்து, அதில் சப்தரிஷிகளை ஆவாஹனம் செய்து தீபாராதனை செய்து நைவேத்தியம் படைக்க வேண்டும்.
அப்போது பஞ்சபூதங்களை வழிபாடு செய்வது உத்தமம். திருமணம் ஆகாத ஆண்கள் பூணூலை குருவிற்கும், வயதில் மூத்தவருக்கும் தானமாக தரலாம். புதிய பூணூல் அணிந்த அனைவரும் முதலில் தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் தர்ப்பணம் செய்கின்றனர்.

தந்தை இல்லாதவர்கள் தங்கள் மூதாதையர்களை நினைத்து எள்ளும், அரிசியும் நீரில் கொடுத்து தர்ப்பணம் செய்வது வழக்கம். பின்னர் தங்களின் பூணூலை புதுப்பித்துக் கொண்டு வேதங்களைப் படிக்கத் தொடங்கலாம். இந்த விரத நியமங்களைக் கடைப்பிடித்து, பூணூல் அணிந்து கொண்டவர்களை எவ்வித துன்பமும் நெருங்காது. எதிரிகளின் தொல்லை குறையும்.

பூணூல் போட்டுக் கொள்ளக்கூடிய ஆண் பாலகனாக இருந்தால் பிரம்மச்சாரி எனும் அந்தஸ்திற்கு உயர்த்தப்படுகிறார். அதன் பின்னர் வேதங்களைக் கற்று தேற வேண்டும். அவன் பிரம்மச்சரிய விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

Exit mobile version