கடந்த நவம்பர் 6-ம் தேதி இரவு பெய்த கனமழையால் தி. நகர் விஜயராகவா ரோடு என் இல்லத்தைச் சுற்றி வெள்ளநீர் சூழ்ந்து கார்கள் நீரில் மூழ்கும் நிலை / எதிரில் Cloud 9 மருத்துவமனையிலும் தண்ணீர் புகுந்துவிட எங்கள் தொகுதி எம்எல்ஏ. டாக்டர் எழிலன் அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன்.
ஒரு மணி நேரத்தில் அங்கே வந்து பிரச்சினைக்கு தீர்வுகாண ஓடோடி வந்தமைக்கு நன்றியும் பாராட்டும். ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் இப்படி கடமையில் கண்ணாயிருந்தால் அரசியலில் புது நாகரீகமும் பொதுச் சேவகர்களுக்கு மரியாதையும் தானாய் வந்துசேரும். – உடனே உதவ வந்தது ஆயிரம் விளக்கு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எழிலன் – உதவிக்கு அழைத்தது ஆர்.வி.உதயகுமார். இயக்குநர்
