Home Uncategorized சென்னை மெட்ரோ வாட்டர் அறிவிப்பு

சென்னை மெட்ரோ வாட்டர் அறிவிப்பு

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) பூந்தமல்லி நெடுஞ்சாலையில் முக்கிய நீர் குழாயில் இணைப்பு வேலைகளை செய்து வருகிறது.

இதன் காரணமாக மே 24-ந் தேதி காலை 8 மணி முதல் மே 25-ந் தேதி காலை 8 மணி வரை தண்ணீர் விநியோகம் தடைபடும். அண்ணா நகர் மண்டலத்தில் (மண்டலம் 8) இந்த வேலை நடக்கிறது.

ஐந்து மண்டலங்களில் தண்ணீர் சப்ளை பாதிக்கப்படும் என்று மெட்ரோ வாட்டர் தெரிவித்துள்ளது. எந்தெந்த பகுதிகளில் தண்ணீர் வராது? மண்டலம் 4-ல் தண்டையார்பேட்டையில் தண்ணீர் சப்ளை இருக்காது. ராயபுரம் மண்டலத்தில் (மண்டலம் 5) புரசைவாக்கம், பெரியமேடு, எழும்பூர், சௌகார்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை ஆகிய இடங்களில் தண்ணீர் வராது.

திரு.வி.க. நகர் மண்டலம் (மண்டலம் 6), அண்ணா நகர் மண்டலம் (மண்டலம் 8), தேனாம்பேட்டை மண்டலம் (மண்டலம் 9) ஆகிய இடங்களில் ஓட்டேரி, அயனாவரம், பெரம்பூர், செம்பியம், கீழ்ப்பாக்கம், வில்லிவாக்கம், கெல்லிஸ், திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளில் தண்ணீர் சப்ளை தடைபடும்.

Exit mobile version