Home Uncategorized சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டிவதைத்து கொண்டிருந்த நிலையில், திடீரென நேற்றிரவு முதல் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. 
தியாகராய நகர், கிண்டி, சைதாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்தது. மேலும், பல்லாவரம், தாம்பரம், சேலையூர், பூந்தமல்லி என புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால், வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வந்த சென்னை புறநகர் வாசிகள் தற்போது பெய்த மழையால் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Exit mobile version