சென்னையில் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இதற்கு தீர்வு காணும் வகையில் சென்னையில் ரிமோட் மூலம் இயங்கும் போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக ஈவிகே.சம்பத் சாலை, புரசைவாக்கம் தாசப்பிரகாஷ், வேப்பேரி ரித்தர்டன் சாலை உள்ளிட்ட 5 இடங்களில் சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இது மற்ற இடங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
