Home Uncategorized சென்ரல் ரயில் நிலையத்தில் குடிபோதையில் காவலர் ரகளை

சென்ரல் ரயில் நிலையத்தில் குடிபோதையில் காவலர் ரகளை

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மது போதையில் காவல்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காவலரின் வீடியோ இணையத்தில் பரவ தொடங்கியது. மேலும் சபரி குமார் விசாரணை மேற்கொண்டு தில் பெரியமேடு காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் காவலராக பணிபுரிந்து வருகிறார் என்பதும்

சம்பவத்தன்று இவர், சென்ட்ரல் ரயில்வே நிலையத்தில் சரக்கு வைக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் சோதனை செய்வதாக கூறிக்கொண்டு அங்கிருந்த சரக்கு பார்சல் அனைத்தையும் எட்டி உதைத்து கீழே இழுத்து போட்டதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த ரயில்வே பாதுகாப்பு படையினர் விசாரித்த போது சபரிகுமார் அளவு கடந்த மதுபோதையில் இருந்தது  தெரியவந்தது. 

சபரி குமார் ரகளை செய்த வீடியோவில் சிரித்த மேனியாக போஸ் கொடுத்துக் கொண்டும் பின்னர் போதையில் சேரில் அமர கூறியதால் போதையில் சரிந்து விழுந்ததும் வீடியோவில் வெளியான நிலையில் போலீசார் சபரிகுமார் மீது வழக்குப்பதிவு செய்தும் காவல்துறை மாவட்ட உயர் அதிகாரியான கீழ்ப்பாக்கம் மாவட்ட துணை ஆணையர் கார்த்திகேயன் அவர்கள் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் நேரடியாக கீழ்ப்பாக்கம் மாவட்ட துணை ஆணையர் கார்த்திகேயன் அவர்கள் நேரடியாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Exit mobile version