Home Uncategorized சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகரஜோதி காட்சி

சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகரஜோதி காட்சி

மகர ஜோதி என்பது மகர சங்கராந்தி தினமான தை மாதம் 1ஆம் தேதி மாலையில் சூரியன் மறையும் நேரத்தில் வானில் தோன்றும் ஒரு புனிதமான நட்சத்திரமாகும். மற்ற நாட்களில் அது தெரியாது.

அண்டவெளியில் எத்தனையோ கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் மின்னிக்கொண்டிருக்கின்றன. அதில் சில நட்சத்திரங்கள் சில ஆண்டுகளுக்கு ஒரு முறையும், சில 100 ஆண்டுகளுக்கு ஒரு முறையும், இன்னும் சில சில மாதங்களுக்கு ஒரு முறையும் என தெரிவதுண்டு.

அது மாதிரி தான் மகர ஜோதியன்று தெரியும் நட்சத்திரமும். மகர நட்சத்திரம் அது மாதிரிதான் மகர ஜோதியன்று தெரியும் நட்சத்திரமும். இது 365 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தோன்றும் ஒரு அரிய நிகழ்வாகும். இதனை நம் முன்னோர்களான சித்தர்களும், ரிஷிகளும் தொடர்ந்து பல ஆண்டுகள் ஆராய்ந்து பார்த்த பின்பு தான் உண்மை என்று ஒப்புக்கொண்டார்கள்.

நாமும் அதை ஒப்புக்கொள்வது தான் கடவுள் மீது பக்தி செலுத்துவது என்பது உண்மையான பக்தியாகும்.

Exit mobile version