சர்ச்சைக்குரிய மனுஷி திரைப்படத்தில் மாநில அரசை மோசமாக சித்தரித்துள்ளதாகவும், கம்யூனிச கொள்கையை குழப்பும் வகையில் காட்சிகள் அமைக்கப் பட்டுள்ளதாகவும் கூறி, சென்சார் சான்று மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் தணிக்கை சான்று வழங்க மறுத்ததை எதிர்த்து வெற்றிமாறன் தரப்பில் வழக்கு கொடுக்கப்பட்டுள்ளது, வெற்றிமாறன் தாக்கல் செய்த மனு சென்னை ஐகோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வரவிருக்கிறது.இந்நிலையில் தணிக்கை சான்று மறுப்பு குறித்து பேசியிருக்கும் வெற்றிமாறன், சென்சார் போர்டின் உறுப்பினர்களின் தனிப்பட்ட கருத்துக்களை தனக்கு தெரிவிக்கவில்லை என்றும், பேச்சு சுதந்திர வரம்புக்குள் வராத காட்சிகளை எடிட் செய்ய தயாராக உள்ளோம் என்றும் கூறியுள்ளார். மேலும் படத்தை மறு ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்கக் வேண்டும் என்ற கோரிக்கையையும் வெற்றிமாறன் வைச்சிருக்கார்
