Home செய்திகள் 717 டாஸ்மாக் கடைகள் மூடல்.. முதலமைச்சர் விஜயின் அதிரடி உத்தரவு!

717 டாஸ்மாக் கடைகள் மூடல்.. முதலமைச்சர் விஜயின் அதிரடி உத்தரவு!

தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள . ச. ஜோசப் விஜய் மாநிலம் முழுவதும் உள்ள 717 டாஸ்மாக் (TASMAC) மதுபானக் கடைகளை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மூடுவதற்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பொதுமக்களின் நலன் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த முக்கிய முடிவின்படி, வழிப்பாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் 500 மீட்டர் சுற்றளவுக்குள் அமைந்துள்ள கடைகள் அடையாளம் காணப்பட்டு அகற்றப்படவுள்ளன.

அதன்படி, வழிப்பாட்டுத் தலங்களுக்கு அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்களுக்கு அருகிலுள்ள 186 கடைகள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகிலுள்ள 255 கடைகள் என மொத்தம் 717 சில்லறை விற்பனை நிலையங்கள் மூடப்பட உள்ளன.

தற்போது தமிழகத்தில் 4,765 டாஸ்மாக் கடைகள் செயல்பாட்டில் உள்ள நிலையில், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மற்றும் உணர்வுபூர்வமான பகுதிகளில் மது விற்பனையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் முதலமைச்சரின் இந்த உத்தரவு வெளியாகியுள்ளது.

அரசின் இந்த அறிவிப்பு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Exit mobile version